பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி நூறு நாட்களை கடந்து நேற்றுடன் முடிவடைந்துவிட்டது. மலேசியாவை சேர்ந்த தமிழரான முகின் இந்த மூன்றாம் சீசனின் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மக்களிடம் பிரபலமடைந்த சாண்டி இரண்டாவது இடத்தை பிடித்தார்.

Advertisment

tharshan

இவர்களைபோல சக போட்டியாளராகவும், மக்கள் மத்தியில் பேராதர்வும் கொண்ட ஒருவராக பிக்பாஸ் போட்டி தொடங்கியதில் இருந்து இருந்தவர் தர்ஷன். இவர் கடைசியாக போட்டியைவிட்டு வெளியேறினார். பலரையும் கவர்ந்த தர்ஷன் ஈழ தமிழர் ஆவார். இலங்கையை சேர்ந்த தர்ஷன்தான் இந்த வருடத்தின் வின்னர் என்பதுபோலவே முன்பில் இருந்து காட்டப்பட்டது. கமல்ஹாசனே தர்ஷன் வெளியேறியது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது என்றார்.

Advertisment

alt="sss" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="ed6e1411-d611-4d0e-b15b-b3acfb6de422" height="275" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500X300.jpg" width="458" />

இந்நிலையில் ஃபைனல் நடைபெற்ற மேடையில் பேசிய கமல், தனது ராஜ்கமல் இண்டர்நேஷனல் தயாரிக்கும் ஒரு படத்தில் தர்ஷன் நடிக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

Advertisment